Friday, September 18, 2015

வேர்களில் விஷம் வார்த்தால்....



தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம்  நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015
                             வகை 4 புதுக் கவிதைப் போட்டி

                         
                                  வேர்களில் விஷம் வார்த்தால்....

விண் வெளியை உழுது
வயல்களாக்கி
பெருங்கடல்களை தூர்த்து
மனைகளாக்கி
பெருமைப்படலாம்

ஆனால்

முன்னேற்றத்தின்
மறு பக்கத்தில்
பண்பை இழந்த மனிதம்
பரிதவித்துக் கொண்டிருக்கிறது

நட்பு கருணை ஈகை

ஒழுக்கம் உண்மை அன்பு
இவையெல்லாம்
காலாவதியான சொற்களாய்
அறிவிக்கப்பட்டு

காமம் துரோகம் களவு

கொலை கொள்ளை ஏய்த்தல்
இவையே வளர்ச்சியின் வழியாய்
முன்மொழியப்படுகிறது

பண்பில்லா வளர்ச்சி

சாக்கடையில் கலந்த
சந்தனமாகிவிட்டது

வேர்களுக்கு
விஷம் வார்த்தால்
விழுதுகள் என்ன
அமுதமாப் பொழியும் ?



இப்படைப்பு எனது சொந்த படைப்பே என உறுதி கூறுகிறேன்

தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம்  நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015-க்காகவே எழுதப்பட்டது.

இதற்கு முன் வெளியான படைப்பு அல்ல. முடிவு வெளி வரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது எனவும் உறுதி அளிக்கிறேன் -                                      கொ.வை. அரங்கநாதன்




4 comments:

  1. பண்பாட்டு உரநீரை வேரில் பாய்ச்சுவோம் பாழ்படா மனிதநேயம் மலர்த்திக் காட்டுவோம். -- விரக்தி வேண்டாம விடியும் நாளை..

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  3. நட்பு கருணை ஈகை
    ஒழுக்கம் உண்மை அன்பு
    இவையெல்லாம்
    காலாவதியான சொற்களாய்
    அறிவிக்கப்பட்டு

    nice

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete