தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம்  நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015
                                         வகை 4 புதுக் கவிதைப் போட்டி
                       நாகரீக வேஷங்கள்
கிழிந்த ஜீன்ஸும்
குறைந்த ஆடையும்
நுனி நாக்கு ஆங்கிலமும்
நுகர்வோர் கலாச்சாரமும்
வளர்ந்து விட்டதற்கு
சாட்சியாக வைக்கப்படுகிறது
பட்டப்பகலாயிருந்தும்
கழுத்தில் நகையுடன்
ஆண்களால் கூட
நடமாட முடியவில்லை
பேருந்துகளிலும்
அலுவலகங்களிலும்
அகப் புறத் தாக்குதலுக்கு
ஆளாகின்றனர் பெண்கள்
சமூகப்பற்றோ தேசப்பற்றோ 
எதுவுமின்றி நடக்கும்
அரசியல் அடவடிகள்
ஆட்டோக்கள் முதல்
கல்விச்சாலைகள் வரை
கைகளில் வைத்திருக்கும்
தாதாக்களின் தனி ராஜ்யம்
பண்பாடில்லா இச்சமூகத்தில்
வானுயர் கட்டிடங்களையும்
வணிகமயமாக்கலையும்
நாகரீக வேஷங்களையும்
முன்னேற்றத்தின் குறியீடாய்
எப்படி முன்வைக்க முடியும்?
இப்படைப்பு எனது சொந்த படைப்பே என உறுதி கூறுகிறேன்
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைஅ கல்விக் கழகம்  நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015-க்காகவே எழுதப்பட்டது.
இதற்கு முன் வெளியான படைப்பு அல்ல. முடிவு வெளி வரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது எனவும் உறுதி அளிக்கிறேன் --கொ.வை.அரங்கநாதன்
படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...
ReplyDeleteஇணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html←
நன்றி...
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
http://dindiguldhanabalan.blogspot.com
அருமை-சரஸ்வதிராசேந்திரன்
ReplyDelete